தமிழகத்தின் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் சிலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
நிர்வாக வசதிக்காக ஐ.ஏ.எஸ் உயர் அதிகாரிகளை தமிழக அரசு அவ்வப்போது பணியிடமாற்றம் செய்து வருவது வழக்கம். அந்த வகையில், இன்று சிறப்பு திட்ட செயலாக்கத்துறை மற்றும் மது விலக்கு மற்றும் ஆயத்த தீர்வை உள்ளிட்டவற்றில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் பணியிட மாற்றம் நடைபெற்றுள்ளது. இதன் விவரம் வருமாறு:-
* சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை துணை செயலாளராக பிரதாப் நியமனம்.
* மது விலக்கு மற்றும் ஆயத்த தீர்வை துறை ஆணையராக ஜெயகாந்தன் நியமனம்.
* ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இணை செயலாளராக ரத்னா நியமனம்.
* சிஎம்டிஏ தலைமை நிர்வாக அலுவலகராக காயத்ரி கிருஷ்ணன் நியமனம்.
* தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண் இயக்குனராக விஜயகார்த்திகேயன் நியமனம்.
* தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழக நிர்வாக இயக்குனராக ப.சிங் நியமனம்.